தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் அமைச்சர் கருப்பண்ணன் பரப்புரை !

ஈரோடு: பெருந்துறையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பரப்புரை மேற்கொண்டார்.

By

Published : Mar 12, 2021, 6:40 PM IST

ஈரோட்டில் பரப்புரை களத்தில் இறங்கிய அமைச்சர் கேசி கருப்பண்ணன்!
ஈரோட்டில் பரப்புரை களத்தில் இறங்கிய அமைச்சர் கேசி கருப்பண்ணன்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜேகே என்கின்ற ஜெயக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜெயக்குமாருக்கு ஆதரவாக பெருந்துறையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “அதிமுக வாக்குகளை, தவிர மாற்று கட்சி வாக்குகளையும் கைப்பற்ற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மகளிர் சுய உதவி கடன் தள்ளுபடி, வருடந்தோறும் ஆறு சிலிண்டர், குடும்பத் தலைவிக்கு 1500 ரூபாய் உதவிதொகை என அதிமுக அரசின் அறிவிப்புகள் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் அமைச்சர் கருப்பண்ணன் பரப்புரை !

இத்திட்டங்கள் கண்டிப்பாக நடைமுறைக்கு வரும். இதன் மூலம் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்" என்றார்.

இதையும் படிங்க...கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை பக்தர்களுக்கே கொடுத்துவிடுங்கள் - சந்தானம் ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details