தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் அக்கட்சியின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றுவருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வரதநல்லூர், சன்னியாசிபட்டி மூன்று ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கொடிகளை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் கூலிக்காரன் பாளையம் பகுதியில் நடைபெற்ற திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 50 பெண்கள் உள்பட 200 பேர் அதிமுகவில் இணைந்தனர்.