கோபிசெட்டிபாளையம் அருகே மேரி என்ற பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு அதை தடுக்க வந்தவரையும் அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் தப்பிக்க பயன்படுத்திய இருசக்கர வாகன எண்ணை கொண்டு தனிப்படையினர் பல பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர்.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பிரிவு சாலையின் அருகில் தனிப்படையினர் சென்றுகொண்டிருந்தபோது கொலையாளி தப்பிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்னைக் கொண்டு அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கொலையாளி அவர்தான் என்பது உறுதியானது.
மேரியின் கடைசி மகளை (19) அந்தியூர் பர்கூர் மலைப்பகுதி திக்கையூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் முருகன் (30) கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.