தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் சாராயம் காய்ச்சிய நபர் அதிரடி கைது! - erode latest news

ஈரோடு: அரச்சலூர் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சி வந்த நபரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

erode

By

Published : Sep 29, 2019, 8:00 AM IST

ஈரோடு, அரச்சலூரை அடுத்த பழையபாளையத்தில் உள்ள வீடு ஒன்றில் சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பழனிசாமி என்பவரது வீட்டில் சாராயம் காய்ச்சப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஈரோடு மதுவிலக்கு காவல் துறை

பின்னர், பழனிசாமியை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மதுவிலக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வெளிமாநில பாக்கெட் சாராயம் வைத்திருந்த இருவர் கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details