தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மழை எதிரொலி - ஈரோடு மாட்டுச் சந்தையில் விற்பனை சரிவு! - கருங்கல் பாளையம் மாட்டுச்சந்தை

ஈரோடு:தொடர் மழை காரணமாக கருங்கல் பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Karungalpalayam cow market

By

Published : Oct 17, 2019, 3:32 PM IST

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை புகழ்பெற்றது. வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச் சந்தையில் ஈரோடு மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் தங்களது மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இங்கே விற்கப்படும் மாடுகள் நல்ல விலை உயர்ந்ததும் தரமானதாகவும் இருப்பதால், விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். வாரந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ரூ.5 முதல் ரூ.6 கோடி வரை விற்பனை நடைபெறும்.

கருங்கல் பாளையம் மாட்டுச்சந்தை

இந்நிலையில் ஈரோட்டில் கடந்த இருதினங்களாக பெய்து வரும் கனமழையால், மாட்டுச்சந்தைக்கு மாடுகளின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. வியாழக்கிழமையான இன்று மாட்டுச்சந்தை கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மாடுவாங்க வந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

இதையும் படிங்க:'தண்டனையை நிறுத்தி வையுங்கள்' - பேரறிவாளன் மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details