ஈரோடு மாவட்டம், தாளவாடி புலிகள் காப்பகம் அமைந்துள்ள மலைப்பகுதியில் மக்கள் ஆடு, எருமை, பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இரு மாநில எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் காட்டில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று கடந்த ஒரு வருடமாக ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்தது.
சூசைபுரம், மல்கொத்திபுரம், மகாராஜபுரம், தொட்டகாஜனூர், சூசைபுரம் என குறிப்பிட்ட பகுதிகளில் கால்நடைகளை வேட்டையாடிவிட்டு அருகில் உள்ள காட்டில் பதுங்கி வாழ்ந்து வந்தது. இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க பல்வேறு இடங்களில் கூண்டு வைத்து வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஆனால் ஆறு மாதங்களாக கூண்டில் சிக்காமல் சிறுத்தை தப்பி வந்தது. இந்நிலையில் நேற்று (ஜுன் 29) திகினாரை மாதேவன் என்பவரது வீட்டில் கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்றது.