கரோனா வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்தானது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒரு சில தளர்வுகளுடன் மற்ற வாகனங்களுக்கு போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக அரசு பேருந்தானது இரண்டு நாள்களாக தமிழ்நாட்டிற்குள் வந்து செல்வதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் கர்நாடக அரசு பேருந்து ஒன்று நிற்பதை கண்ட பொதுமக்கள், பேருந்து சேவை தொடங்கிவிட்டதா என ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.