தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 8, 2020, 11:00 PM IST

ETV Bharat / state

குண்டேரிப்பள்ளம் அணையில் தண்ணீர் திறப்பு - அரசாணை வெளியீடு

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து வருகின்ற 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

kunderippallam dam
kunderippallam dam

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதியின் அருகில் அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான கடம்பூர் குன்றி, மல்லியம்மன் துர்க்கம் விளாங்கோம்பை, கம்மனூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று அதிகாலை பெய்த கனமழையினால் காட்டாற்றுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், அணையின் முழுக் கொள்ளவான 42 அடியும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் சார்பில் புன்செய் பாசத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் அணையின் இடது, வலது கரை வாய்க்கால்களுக்கு வருகின்ற 12ஆம் தேதி தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், "ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை வலது, இடது கரை காய்க்கால்களுக்கு 57 நாள்கள் புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். 15 நாள்கள் இடைவெளியில் திறக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கொங்கர்பாளையம், வினோபாநகர், வாணிப்புத்தூர், மோதூர், தோப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,498 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசனம் மூலம் பயன்பெறும்.

இதையும் படிங்க:கரோனா எதிரொலி: நகரத்திலிருந்து கிராமத்திற்கு குடியேறிய தொழிலதிபர் குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details