தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2020, 10:33 AM IST

ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு!

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போக பாசனத்துக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார்.

Bhawanisagar dam
பவானிசாகர் அணை

ஈரோட்டில் மக்களின் நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. இந்த அணையின் மூலம் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3,500 ஏக்கர் விளைநிலங்களுக்கும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

சமீபத்தில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அக்டோபர் 11ஆம் தேதி முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 26ஆம் தேதிவரை முதல்போக பாசனத்துக்கு 24 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், ஜனவரி மாதத்திலும் அணை நீர்மட்டம் முழுகொள்ளளவுடன் நீடிப்பதால் இரண்டாம் போக பாசனம் எள்,கடலை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

இதனை ஏற்று இன்று பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் உள்ள கால்வாய் மதகுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: மதிப்பெண் குறைந்ததால் பறிபோன மாணவியின் உயிர்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details