ஈரோடு:புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் அவசரக் கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் சிதம்பரம், ஆணையாளர் சையது உசேன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடை வைப்பது குறித்து நடந்த போராட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையாளர் மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். இதனால், திடீரென ஆணையாளர் சையது உசேன் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து, கூட்டம் நிறைவடையாமல் ஆணையாளர் பாதியில் சென்றதை கண்டித்து, நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஆணையர் அறைக்கு சென்று அவரை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:விழுப்புரம் ஆசிரம விவகாரம் - 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்