ஈரோடு கருங்கல்பாளையம் விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கழுத்தில் இருந்த 9 சவரன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றனர்.
ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 சவரன் செயின் பறிப்பு! - ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் திருட்டு
ஈரோடு: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 சவரன் தாலிச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 சவரன் செயின் பறிப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4733660-313-4733660-1570902241004.jpg)
chain theft
இதில் அப்பெண்ணின் கழுத்தில் சிறிது காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: '121 சவரன் தங்க நகைகள், 2 செல்ஃபோன்கள், 2 இருசக்கரவாகனங்கள் பறிமுதல்' - பிடிபட்ட பலநாள் வழிப்பறி திருடர்கள்!