ஈரோடு: பெரியார் நகர் அசோகபுரியை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன்-கவிதா தம்பதி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் இத்தம்பதியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர் வீட்டு சுபகாரியத்திற்கு ராமச்சந்திரன் தனது மனைவி கவிதா இரண்டு மகன்களுடன் சென்றுள்ளார்.
உணவுப் பொருட்களை வாங்க ராமச்சந்திரன் வெளியே சென்ற நிலையில், கவிதா தனது மகன்களை விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் ராமச்சந்திரன் கவிதாவுடன் செல்போனில் பேசியுள்ளார். அதற்கு கவிதா, நான் வெளியே சென்றுள்ளேன்; மாலை வருகிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால், மூன்று நாட்கள் ஆகியும் கவிதா வீட்டிற்கு திரும்பவில்லை. கவிதாவின் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ராமச்சந்திரன் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது கவிதா தான் அருணாச்சலம் உடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு அளித்துள்ளார்.