ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள நத்தக்காட்டுத்தோட்டம் கருப்புப்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி சசிகுமார். இவரது மனைவி, குழந்தைகளை ஈரோடு மாவட்ட அதிமுக புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளரும், தனியார் மருத்துவமனை மருத்துவருமான மகேஷ்ராஜா கடத்திச் சென்றதாக கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சசிகுமார் புகார் மனு அளித்தார்.
மனு குறித்து விவசாயி சசிகுமார் கூறுகையில், "எங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுது. 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனக்கும் தனது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தனது மனைவி, மகளுடன் அந்தியூரிலுள்ள அவரது தாயார் வீட்டுக்குச் சென்று வசிப்பதாக முடிவு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தியூரில் வசித்து வருகிறோம்.