ஈரோடு: அந்தியூர் பகுதியில் குதிரை ரேக்ளா பந்தயம் நேற்று (டிசம்பர் 20) நடைபெற்றது. இப்பந்தயத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன.
பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகளை அப்பகுதி சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், சாலையின் இருபுறமும் நின்று பார்த்து ரசித்தனர். குதிரைகள் கெட்டிசமுத்திரம் ஏரிப் பகுதியில் சென்றபோது ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீர் சாலையின் நடுவே பாய்ந்தது.