தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறி பயணித்த கனரக சரக்கு வாகனம் பறிமுதல்! - திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு லாரி பரிமுதல்

ஈரோடு திம்பம் மலைப்பாதையில் தடையை மீறி பயணித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்திய கனரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தடையை மீறி பயணித்த கனரக சரக்கு வாகனம் பறிமுதல்!
தடையை மீறி பயணித்த கனரக சரக்கு வாகனம் பறிமுதல்!

By

Published : Mar 6, 2021, 3:18 PM IST

ஈரோடு :தமிழ்நாடு, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை திகழ்கிறது. இரு மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாகப் பயணிக்கின்றன. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் 14 சக்கரங்கள் கொண்ட, 16 டன்னுக்கும் அதிகமான பாரம் ஏற்றிச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் திம்பம் மலைப்பாதை வழியே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து மின்சாதனப்பொருட்கள் ஏற்றிய 14 சக்கரம் கொண்ட கனரக சரக்கு லாரி திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மலைப்பாதையின் வளைவில் திரும்பும் போது லாரி பழுதாகி நின்றதால், தமிழ்நாடு, கர்நாடகா இடையே ஐந்து மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்துக் காவல் துறையினர், கிரேன் மூலம் லாரியை நகர்த்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், தடையை மீறி திம்பம் மலைப்பாதையில் பயணித்த ராஜஸ்தானைச் சேர்ந்த லாரியை பண்ணாரி சோதனைச் சாவடியை சேர்ந்த காவல்துறை, வனத்துறையினர் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க :நீலகிரி தொகுதிகள் உலா: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்..!

ABOUT THE AUTHOR

...view details