தமிழ்நாடு

tamil nadu

திம்பம் மலைப்பகுதியில் பெய்த மழையால் சேதமடைந்த பாலம்!

By

Published : Sep 5, 2020, 5:44 PM IST

ஈரோடு: திம்பம் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் சத்தியமங்கலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் உடைந்து சேதமடைந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Heavy rains in the Thimphu hills: Damaged bridge on the highway!
மழையால் சேதமடைந்த பாலம்

தமிழ்நாடு - கர்நாடகாவை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேவுள்ள புதுக்குய்யனூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அப்பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக புதிய பாலம் கட்டும் பகுதியில் தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு (செப்டம்பர் 4) திம்பம் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், வனப்பகுதி வழியாக வரும் காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்ட பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பாலம் உடைந்து சேதமடைந்தது. இதனால், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், சத்தியமங்கலம் காவல் துறையினர் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதன் காரணமாக வாகனங்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details