ஈரோடு அருகேயுள்ள முத்தம்பாளையம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தனது பாட்டியுடன் வசித்து வருபவர் பூங்கொடி. இவர் ஆங்கில பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். பூங்கொடியும் அதே பகுதியைச் சேர்ந்த ஊர்காவல் படையில் பணிபுரியும் அஜீத்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, அஜீத்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி பூங்கொடியுடன் உறவில் இருந்துள்ளார். இதனால், பூங்கொடி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து, பூங்கொடி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஜீத்தை வற்புறுத்தி வந்துள்ளார். அப்போது, அவர் தனக்கு விரைவில் காவல்துறையில் வேலை கிடைக்கவுள்ளதாகவும், வேறு திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறி, கருவைக் கலைக்குமாறு பூங்கொடி வயிற்றை காலால் எட்டி உதைத்து கருவைக் கலைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, தனது காதலரை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க வலியுறுத்தி பூங்கொடியை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் அஜீத்குமார் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அதைத் தொடர்ந்து காவலர்கள் உயர் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அவர்கள் முன்னிலையில் அஜீத்குமார், பூங்கொடியை திருமணம் செய்து கொண்டார்.