தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதியவரை தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம்! - ஈரோடு அண்மைச் செய்திகள்

ஈரோடு : சில்லறை இல்லை எனக்கூறி அரசு பேருந்தில் முதியவரை தாக்கிய நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முதியவரை தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம்
முதியவரை தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம்

By

Published : Apr 12, 2021, 6:55 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தில் முதியவர் ஒருவர் பயணித்தார். அப்போது சில்லறை இல்லை என கூறி அரசு பேருந்து நடத்துனர் குமார், முதியவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான காணொலி காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனைக் கண்ட பலரும் நடத்துனர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஈரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் கணபதி, அரசு பேருந்து நடத்துனர் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : கரோனாவை வெல்வதற்கு இதெல்லாம் உதவாது - சிதம்பரம் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details