ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ஆர்.என். புதுாரைச் சேர்ந்த பெரியசாமி(47), காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவராக இருந்துவருகிறார். இவர், நடத்திவரும் ஜெராக்ஸ் கடைக்கு சில வாரங்களுக்கு முன்பு வந்த 12 வயது சிறுமிக்கு பெரியசாமி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, பவானி மகளிர் காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, தலைமறைவான பெரியசாமியை காவல் துறையினர் வலைவீசி தேடிவந்தனர். இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர், ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன்பின்பு அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.