தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2021, 3:11 PM IST

ETV Bharat / state

ரூ.6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் ஊராட்சியில், மருத்துவமனைகளுக்கு தேவையான ரூ.6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

ரூ.6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
ரூ.6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று(மே.16) ஈரோடு மாவட்டத்தில் என்றும் இல்லாத அளவாக 1, 200க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கோபிசெட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளாள பாளையம், காசி பாளையம், சிறுவலூர், கோட்டுபுள்ளாம்பாளையம் உள்ளிட்ட 7 ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், மினி கிளினிக்களுக்கு சுமார் 6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

கட்டில், மெத்தை, தலையணை, சானிடைசர், முகக்கவசம், ஆவி பிடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட 13 வகையான மருத்துவ உபகரணங்களை தனது சொந்த செலவில் அந்தந்த மருத்துவ ஊழியர்களிடம் அவர் வழங்கினார்.

இதையும் படிங்க:உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுக்கும்!

ABOUT THE AUTHOR

...view details