ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சத்தியமங்கலம், பெரியகுளம், சிக்கரசம்பாளையம், புளியங் கோம்பை, அரியப்பம்பாளையம், எரங்காட்டூர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூ பயிரிடப்பட்டுள்ளது.
மாலைகளுக்கும், திருமண மணவறை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படும் சம்பங்கி பூவிற்கு அதிக கிராக்கி இருப்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சத்தியமங்கலத்தில் இருந்து இவை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட திடீர் ஊரடங்கால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடத்த கட்டுப்பாடு, கோயில்களில் வழிபாடு நடத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பூக்களின் பயன்பாடு குறைந்ததோடு, அவற்றின் விலையை கேட்க ஆளில்லா நிலை ஏற்பட்டது.