தமிழ்நாடு

tamil nadu

ஈரோட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து

By

Published : May 25, 2021, 10:13 PM IST

ஈரோடு: சன்னக்குழியில் குடிசை வீட்டில் பற்றிய தீ காரணமாக 49 ஆயிரம் ரூபாய் உள்பட பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.

ஈரோட்டில் ஏற்பட்ட தீ விபத்து
ஈரோட்டில் ஏற்பட்ட தீ விபத்து

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் தாலுக்காவிற்கு உள்பட்ட கொளப்பலூரை அடுத்த சன்னக்குழியைச் சேர்ந்தவர்கள் வேல்முருகன்- ரங்கம்மாள் தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் இவர்கள் சன்னக்குழி பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மே.25) வேல்முருகன், ரங்கம்மாள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக குடிசையின் மேற்புறத்தில் நெருப்பு பற்றியுள்ளது. இதனைக் கண்ட இருவரும் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

தொடர்ந்து காற்றில் வேகமாக குடிசை முழுவதும் தீ பரவியது. இந்நிலையில், வீட்டுக்குள் இருந்த சமையல் சிலிண்டர் மீது தீப்பற்றியதால் அது வெடித்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் 49 ஆயிரம் ரூபாய், வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சாம்பலாகின. இவ்விபத்து குறித்து சிறுவலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details