ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட ஐய்யப்பாநகரிலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவராகப் பணியாற்றும் அருண்பிரகாஸ் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இன்று காலை அருண்பிரகாஸ் சத்தியமங்கலத்திற்கு வேலைக்குச் சென்ற நிலையில், அவரது தாயாரும் உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். வீட்டில் அருண்பிரகாஸின் தம்பி கோகுல் மட்டும் தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது மற்றொரு படுக்கை அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு அறை பற்றி எரியத் தொடங்கியுள்ளது. புகை வெளியேறுவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.