ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள எல்லபாளையத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் தனது 8, 7 ஆகிய வயதுடைய இரு மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கடந்த 2016ஆம் ஆண்டு ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குருநாதன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.