தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 12, 2020, 2:59 PM IST

ETV Bharat / state

'பாரம்பரிய நெல்களை அதிகளவு சாகுபடி செய்ய வேண்டும்' - ஆட்சியர் கதிரவன்

ஈரோடு: பாரம்பரிய நெல்களை அதிகளவு சாகுபடி செய்து விதையை உற்பத்தி செய்யவேண்டும் என விவசாயிகளிடம் ஆட்சியர் கதிரவன் கேட்டுக்கொண்டார்.

பரம்பரிய நெல் உற்பத்தி
பரம்பரிய நெல் உற்பத்தி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற 14ஆவது தேசிய பாரம்பரிய நெல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் 40க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்விதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இயற்கை வேளாண் வழியில் நஞ்சில்லா உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் கிரியேட் நமது நெல்லைக் காப்போம் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற 14ஆவது ஆண்டு தேசிய நெல் திருவிழாவின் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரிய விதை நெல் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் காட்டுயாணம், மாப்பிள்ளைசம்பா, கருப்புகவுணி, தூயமல்லி, சீரகசம்பா இலுப்பைபூசம்பா, சொர்ணமசூரி, ஆத்தூர்கிச்சலி சம்பா, கருங்குருவை பவானி, காலம் நமக்கு உள்பட 174 பாரம்பரிய நெல் விதைகள் காட்சிப்படுப்பட்டன. விழாவிற்கு வந்திருந்த விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் தலா இரண்டு கிலோ வழங்கப்பட்டது. இந்த இரண்டு கிலோ நெல் விதைகளை விவாயிகள் பயிர் செய்து அடுத்தாண்டு நடைபெறும் நெல் திருவிழாவில் நான்கு கிலோவாக திரும்பி தரும் வகையில் சங்கிலி தொடர் திட்டமும் அமுல்படுத்தப்பட்டது.

மேலும், பாரம்பரிய நெல்கள் குறித்தும் அதன் மருத்துவ குணங்கள், பயிர் செய்யும் முறைகள் குறித்தும் பாரம்பரிய நெல்லால் ஏற்படும் நம்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அழிந்து வரும் பாரம்பரிய நெல்களை பாதுகாக்கவும் விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்விழாவை ஈரோடு ஆட்சியர் கதிரவன் தொடங்கிவைத்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "இயற்கை விவசாயத்தை ஒரு சில விவசாயிகள் மட்டுமே பயிர் செய்து வருகின்றனர். பாரம்பரிய நெல்களை டெல்டா பகுதிகளில் மட்டுமே அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் பாரம்பரிய நெல்களை அதிகளவு சாகுபடி செய்து விதையை உற்பத்தி செய்யவேண்டும்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரம்பரிய நெல் விதைகள், சங்கிலி தொடர் திட்டத்தை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி அனைத்து ரக பாரம்பரிய நெல்களை ஈரோடு மாவட்டத்தில் சாகுபடி செய்யவேண்டும்" என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details