ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது பேசிய விவசாயிகள், "நான்குவழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. தற்போது விவசாய நிலங்களை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் அனுமதியின்றி அமைக்கப்படும் அளவீட்டு கற்களை அகற்றுவோம் என தெரிவித்தனர்.