ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அரசு ஆரம்பப்பள்ளியில் ஆதரவற்ற கருணை இல்லக்குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால், இப்பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் கட்டடம் இருந்தது குறித்தும், அதனருகே விளையாடும் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்றும், விபத்து நிகழும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் "ஈ டிவி பாரத் தமிழ்நாடு" ஊடகம் முழுமையான செய்தி வெளியிட்டது.
இந்த செய்தியைப் பார்த்த தமிழ்நாடு கல்வித்துறையினர், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சென்னை கல்வித்துறை இயக்குநர் ஆகியோர், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை அகற்றிவிட்டு, புதியதாக கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.