ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்தில் யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கும் நிலையில், சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சாலைகளின் ஓரங்களில் அவ்வபோது தென்படும் சிறுத்தை புலி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்தை ஒட்டிய ஊருக்குள் நுழைந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரட்டுப்பள்ளம் அணை அருகே உள்ள நல்லாகவுண்டன் கொட்டாய் பகுதியில், இரண்டு நாட்களுக்கு முன்பு சுமார் இரவு 9 மணி அளவில், வழக்கத்தை விட நாய்கள் அதிக அளவில் குரைத்துள்ளது. நாய் குரைக்கும் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் திவாகர் (21), வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, நாய்கள் துரத்தியதில், சுமார் 3 மீட்டர் இடைவெளியில், மின்னல் வேகத்தில், சிறுத்தை புலி ரோட்டை நான்கு கால் பாய்ச்சலில் கடந்தது. இதைப் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்த திவாகர்.