கரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் வெகுவேகமாகப் பரவிவருவதைத் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தாய்மை அறக்கட்டளை என்னும் தன்னார்வ அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் சாலைகளில் ஆதரவற்று இருப்பவர்களை விருப்பத்தின்பேரில் அழைத்துச் சென்று ஈரோடு திண்டல்மலை, செங்கோடம்பாளையம், வீரப்பம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் தங்கவைத்துள்ளனர்.