தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேவாணியில் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டுப் பெருவிழா - mevaani ayyapan aaratu peruvila

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணியில் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டுப் பெருவிழா மற்றும் மஹா புஷ்பாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மேவாணியில் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டுப் பெருவிழா  ஈரோடு மாவட்டச் செய்திகள்  மேவாணி சாஸ்தா கோயில் விழா  மேவாணியில் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டுப் பெருவிழா  mevaani ayyapan aaratu peruvila  erode mevani sastha temple festivel
மேவாணியில் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டுப் பெருவிழா

By

Published : Jan 4, 2020, 5:24 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள மேவாணியில், தர்மசாஸ்தா ஆலய ஆராட்டுப் பெருவிழா மற்றும் மஹா புஷ்பாபிஷேகவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் ஆலய ஆராட்டுப் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

35ஆவது ஆண்டாக கொண்டாடப்பட்ட இவ்விழாவில் தர்மசாஸ்தா கோயிலிலிருந்து ஐயப்பன் திருவுருவச் சிலை மேவாணி பகுதியில் ஓடும் பவானி ஆறுக்கு செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆற்றில் நீராடல் செய்து நதி கரையோரத்தில் மங்கள இசை முழங்க பசு குதிரை ஆகியவை புடை சூழ பல்வேறு மூலிகைப்பொருட்கள் மற்றும் மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மேவாணியில் தர்மசாஸ்தா ஆலயத்தில் ஐயப்பனுக்கு ஆராட்டுப் பெருவிழா

ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டுப் பெருவிழாவைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பவானி ஆற்றிலிருந்து கோயிலுக்கு தீர்த்தம் எடுத்துவரப்பட்டு திருத்தேர் பவனி வான வேடிக்கையுடன் நடைபெற்றது. இவ்விழாவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் மேவாணி ஊர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டை காண சிறப்பு சுற்றுலா!

ABOUT THE AUTHOR

...view details