ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நலச்சங்கத்தின் தலைவர் செல்வமணி தலைமையில் வினோதா, ராஜேந்திரன் இருவரும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “ஈரோடு மாவட்டம் புங்கம்பாடி விஐபி கார்டனில் 1,800 சதுர அடி உள்ள மணி என்பவருக்குச் சொந்தமான வீட்டினை விற்பனை செய்வதற்காக, கடந்த ஜூலை மாதத்திலிருந்து நாங்கள் பலரிடம் அவ்விடத்தைக் காட்டிவந்தோம்.
அதில், இருதயராஜ் என்பவரைக் கூட்டிச் சென்று காண்பித்தோம். அவர்கள் பல மாதம் என்னை அலைக்கழித்து இப்போது வீடு வேண்டாம் என்றனர்.