தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்! - gutkha seize

ஈரோடு: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ள காவல் துறையினர் மளிகைக் கடை உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

erode-gutkha-seize
erode-gutkha-seize

By

Published : Dec 24, 2019, 3:53 PM IST

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வீரப்பன்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் துறையினர் வீரப்பன்சத்திரம் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியிலுள்ள மளிகைக் கடையிலிருந்து வந்த மாருதி வேனைத் தடுத்து நிறுத்தி அவர்கள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பல்வேறு வடிவிலான பாக்கெட்டுகளில் அந்த காரில் இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மளிகைக் கடையில் மறைத்து வைத்து நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விநியோகிப்படுவது தெரியவந்தது.

குட்கா பொருட்கள் பறிமுதல்

இதனைத் தொடர்ந்து மளிகைக் கடையில் சோதனையிட்ட காவல் துறையினர் மளிகைக் கடையில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்ததுடன் மளிகைக் கடை உரிமையாளரான பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் புகையிலைப் பொருட்கள் கொள்முதல், விற்பனையில் தொடர்புடைய வினோத் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

ரூ. 152 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details