ஈரோடு:சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூர் செல்லும் பேருந்து வழக்கம்போல், ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில்பேருந்து பயணிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 53 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில் ஈரோடு திண்டல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக துடித்துக்கொண்டே இடதுபுறம் சாய்ந்துள்ளார். உடனடியாக திருப்பூர் நோக்கி பயணித்த பயணி ஒருவர் பெரும் விபத்து ஏற்படாவண்ணம் சென்டர் மீடியனில் பேருந்தை பயங்கரமாக மோதச் செய்து விபத்தை தவிர்த்துள்ளார்.