தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2020, 1:22 PM IST

ETV Bharat / state

ரூ.3 லட்சம் மதிப்புள்ள 30-க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் மரங்கள் கடத்தல்!

ஈரோடு: தலமலை கோடிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க வளாகத்திலிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான 30-க்கும் மேற்பட்ட மரங்கள் கடத்தப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

erode-at-thalamalai-kodipuram-rs-3-lakh-worth-silver-oak-tree-has-been-trafficked
வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான மரங்கள் கடத்தல்!

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்தில் தாளவாடி, ஆசனூர், தலமலை, அருள்வாடி, பைணாப்புரம், பனக்கள்ளி என மொத்தம் ஆறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை கடன் சங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்தச் சங்கங்களில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தலமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட சில்வர் ஓக் ரக மரங்கள் பராமரிக்கப்பட்டுவந்தன. இந்த மரங்கள் அனைத்தும் நன்கு வளர்ந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் (02/02/2020) இரவு இந்த மரங்கள் அனைத்தும் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.

மரங்களை வெட்டும்போது ஏற்பட்ட மரத்துண்டுகள் அங்கேயே கிடக்கின்றன. கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் உதவியுடன் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து கூட்டுறவுச் சங்க அலுவலர்கள் நேரில் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அரசு வளாகங்களில் வளர்க்கப்படும் மரங்களை வெட்ட வேண்டுமானால் தலமலை பாதுகாப்புக் குழு விதிகளின்படி அனுமதிபெற்று மரங்களை வெட்டு வேண்டும். ஆனால் எந்தவொரு முன்அனுமதியும் இன்றி இரவோடு இரவாக மரங்கள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மதிப்பு சுமார் மூன்று லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மரங்ளை வெட்ட வருவாய்த் துறை, வனத் துறையினரிடம் முறையான அனுமதியும் பெறவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது பற்றி தாளவாடி வருவாய் அலுவலரிடம் கேட்டபோது, தலமலை கூட்டுறவுச் சங்கத்தில் உள்ள மரங்களை வெட்ட எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் அவ்வாறு வெட்ட அனுமதி கடிதமும் வழங்கப்படவில்லை எனக் கூறினார். வருவாய்த் துறைக்குச் சம்பந்தப்பட்ட இடத்தில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் வனத் துறையிடம் அனுமதி பெறவில்லை என தலமலை வனச்சரகர் அலுவலர் பழனிச்சாமி எனத் தெரிவித்தார்.

இது குறித்து தாளவாடி வருவாய் வட்டாட்சியர் ஜெகதீசன் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர் என்றார்.

அனுமதி பெறாமல் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி விற்பனை செய்யதவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்திலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான மரங்கள் கடத்தல்

இதையும் படியுங்க:'ஸ்கூலுக்கு வேணாம்... வா கூட்டத்துக்கு போலாம்' - மாணவர்களைக் கடத்திய நாம் தமிழர் நிர்வாகி கைது!

ABOUT THE AUTHOR

...view details