ஈரோடு: பெருந்துறை பகுதியில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மின்கம்பங்களில் பணிகள் நடைபெற்றன. அப்போது, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் சிவசங்கரன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்புகளை கொடுப்பதற்கான பணிகளை செய்துகொண்டிருந்தார்.
அப்போது, தீடிரென மின்சாரம் தாக்கியதில் டிரான்ஸ்பார்மிலேயே உடல் கருகி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், உயிரிழந்த சிவசங்கரனின் உடலை கைப்பற்றினர்.