தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மரத்தில் ஏறி முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு! - தேவிப்பட்டிண் மாடக்கொட்டான்

ராமநாதபுரம் அருகே ஆடுக்கு இலை பறிக்க மரத்தில் ஏறி முதியவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மரத்தில் ஏறி முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
மரத்தில் ஏறி முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

By

Published : Jun 19, 2021, 7:02 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிண் மாடக்கொட்டான் கிராமத்தை அடுத்த ரமலான் நகரைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர் அலி (65்). இவர் ஆட்டுக்கு இரை போடுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று (ஜூன்.19) ஆட்டுக்கு இரை போடுவதற்காக வீட்டின் அருகே உள்ள வேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியுள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் தட்டியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கதினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அப்பா சாவுக்கு நான் காரணமா? குற்ற உணர்ச்சியில் மகன் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details