தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டீசலுக்கு காசு இல்லைங்க' - திருடிய வாகனத்தை நடுரோட்டில் விட்டுச்சென்ற திருடர்கள் - Due to lack of diesel in Erode, thieves who left the vehicle on road

ஈரோடு: திருடிய வாகனத்தில் டீசல் தீர்ந்த காரணத்தினால், அவ்வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு திருடிய நபர்கள் தப்பியோடிய சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு
ஈரோடு

By

Published : Jan 22, 2020, 8:56 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வசித்துவருபவர் ரவி(48). இவர் சொந்தமாக மினிலாரி வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். இவர் வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்குப் பிறகு ரவி வெளியே வந்து பார்தத்போது, தனது வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினரிடம் ரவி புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், தீவிரமாக வாகனத்தை தேடிவந்தனர்.

இந்நிலையில், புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த ஒருவர், ரவியின் வாகனம் கோவை இடுகம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருப்பதாக அவருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சோதனை செய்ததில் வாகனத்தை திருடிச்சென்ற நபர்கள் டீசல் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்திச்சென்றது தெரிய வந்தது. பின்னர், வாகனத்தை மீட்ட காவல் துறையினர், அதை ரவியிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: கோவையில் பெண்கள் உள்ளாடைகளைத் திருடும் சைக்கோ திருடன்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details