தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடற்புழு நோயால் யானைக்கு நேர்ந்த கதி! - Male elephant deaths in the Kadampur forest

ஈரோடு: சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் குடற்புழு நோய் தாக்கியதால் யானை உயிரிழந்துள்ளது.

elephant

By

Published : Oct 29, 2019, 10:59 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் எல்லைக்குள்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். ஆணரைப்பள்ளம் என்ற இடத்திற்குச் சென்றபோது துர்நாற்றம் வீசியதால் ஏதேனும் விலங்கு இறந்து கிடக்கிறதா எனத் தேடிப்பார்த்துள்ளனர். அப்போது உடல் அழுகிய நிலையில் யானை ஒன்று இறந்துகிடந்தைக் கண்டனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்பேரில், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இதில் சுமார் 35 வயதுள்ள ஆண் யானை என்றும் குடற்புழு நோய் தாக்குதலால் யானை இறந்தது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து யானையின் உடல் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக வனப்பகுதியில் விடப்பட்டது.

இதையும் படிங்க: மர்மமான முறையில் பெண் யானை பலி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details