கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கரும்பு ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. திம்பம் 3ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும் போது, அதிக பாரம் காரணமாக சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
அப்போது லாரி ஓட்டுநர் குமாரசாமி லாரியில் இருந்து குதித்து தப்பினார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் லேசான காயத்துடன் ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.