தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை! - பவானீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை

ஈரோடு: பவானீஸ்வரர் கோயில் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இடிந்த நிலையில் காணப்படும் பவானீஸ்வரர் கோயில்
இடிந்த நிலையில் காணப்படும் பவானீஸ்வரர் கோயில்

By

Published : Mar 14, 2020, 2:42 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரம் பிரசித்திப் பெற்ற பவானீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்து வந்தனர். பழமையான கோயில் என்பதால், 2018ஆம் ஆண்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோயிலின் தெற்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக கோயில் சுவர் கட்டப்படாத நிலையில், பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று, இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.40 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி அண்மையில் தொடங்கியது.

இடிந்த நிலையில் காணப்படும் பவானீஸ்வரர் கோயில்

மேலும், பொக்லைன் இயந்திரம் தெற்குபுறமாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்கிடையே, கடந்த 10ஆம் தேதி கோயிலின் தெற்கு பிரகார சுவர் இடிந்து விழுந்தது. அப்போது பக்தர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால், கோயிலின் நடை சாத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அறநிலையத்துறை, பொறியியல் வல்லுநர்கள், அலுவலர்கள் ஆகியோர் இடிபட்ட பகுதியை பார்வையிட்டு கோயிலில் வழிபாடு செய்ய உறுதித் தன்மையில்லை என தெரிவித்தனர். இதையடுத்து, இடிந்து விழும் நிலையில் கோயில் உள்ளதால், பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு தடை விதிப்பதாக அறநிலையத்துறை அறிவிப்பு பலகையை வைத்தது.

இதனால், கோயிலில் உள்ள சிலையை துணியால் மறைத்து, அதை தற்காலிகமாக கோயிலின் மற்றொரு பகுதியில் வைத்து வழிபாடு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க:இரண்டாவது உயிரை காவு வாங்கிய கொரோனா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details