ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக ரகுநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு உள்ளதால் அவர் இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
'நாடு விட்டு நாடு வந்து பரவும் கரோனாவை விரட்டுவோம்' - சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் காவலர் - சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகும் காவலர்
ஈரோடு: கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடலை கரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றி பாடிய சத்தியமங்கலத்தை சேர்ந்த காவலர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார்.
!['நாடு விட்டு நாடு வந்து பரவும் கரோனாவை விரட்டுவோம்' - சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் காவலர் PC](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6735958-187-6735958-1586511697663.jpg)
PC
இந்நிலையில் காவலர் ரகுநாதன் கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஊருவிட்டு ஊருவந்து' என்ற பாடல் மெட்டில் கரோனா விழிப்புணர்வு பாடலை எழுதியும், பாடியும் அசத்தியுள்ளார்.
சமூக வலைதளத்தில் ட்ரெண்டான ரகுநாதன்
இந்தப் பாடலில் "நாடு விட்டு நாடு வந்து பரவும் கரோனாவை விரட்டுவோம்" எனவும், கை கழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வரிகளும் இடம் பெற்றுள்ளன.
Last Updated : Apr 10, 2020, 4:42 PM IST