தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவை அலட்சியமாகக் கருதி ஒன்றுகூடி பணியாற்றிய 100 நாள் பணியாளர்கள் - ஈரோட்டில் கரோனா அலட்சியம்

ஈரோடு: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருக்கும் வேளையில், கிராம மக்கள் 50 பேர் ஒன்றாகக் கூடி பணியாற்றியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Mar 22, 2020, 10:42 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புதுவடவள்ளியில் நேற்று 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 50க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள சாலையோர மண்ணை அகற்றி சாலையைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கரோனா அச்சுறுத்தல் உலகையை மிரட்டி வரும் நிலையில், ஐந்து பேருக்கு மேல் ஒன்றாகக் கூடி நிற்கக்கூடாது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வேலை செய்யும் பணியாளர்கள்

இந்த ஆபத்தான சுழலிலும் முகக் கசவம் அணியாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கிராம மக்கள் 50 பேர் ஒன்றாக நின்று பணியாற்றியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மருத்துவர்களுக்கு சக மருத்துவர் விஜய பாஸ்கர் எழுதிய பாராட்டு மடல்!

ABOUT THE AUTHOR

...view details