தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் கரோனா தாக்கம் குறைவு!

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து, தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்வு ஏற்படுகிறது.

By

Published : May 1, 2020, 11:09 AM IST

ஈரோட்டில் கரோனா தாக்கம் குறைவு!
ஈரோட்டில் கரோனா தாக்கம் குறைவு!

ஈரோடு மாவட்டம், மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பெற்று தமிழ்நாடு அளவில் முன்னிலை பெற்ற மாவட்டமாக விளங்கியது. 1600க்கும் மேற்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 70 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தொடர் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதனிடையே மாவட்டம் முழுவதும் கரோனா பாதிப்பு நபர்கள் கண்டறியப்பட்டு 15 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு 33 ஆயிரத்து 330 குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 800 நபர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.

ஈரோட்டில் கரோனா தாக்கம் குறைவு!

இதனிடையே மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வித நோய்த்தடுப்பு நடவடிக்கையின் காரணமாக புதிய நபர்களுக்கு நோய் பரவுவது வெகுவாக குறைந்தது.

அதேபோல் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக பெருந்துறையில் சிகிச்சை பெற்றுவந்த 70 நபர்களும் முற்றிலும் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இதன் காரணமாக ரெட் அலெர்ட் மாவட்டமாக இருந்த ஈரோடு மாவட்டம் தற்போது ஆரஞ்ச் நிற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சென்னை மாநகரில் உள்ள பள்ளியில் கரோனா மையம் - ஆட்சியர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details