தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லிட்டில் கிருஷ்ணர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா! - krishna jeyanthi celeberation in erode

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள நந்தகோகுலத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் 108 குழந்தைகள் கிருஷ்ணர், ராதை உள்ளிட்ட வேடங்கள் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலமாக சென்ற குழந்தைகள்

By

Published : Aug 24, 2019, 11:40 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அக்ரஹார வீதியில் அமைந்துள்ள நந்தகோகுலம் கோசாலையில் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணஜெயந்தி விழா மிக விமர்சியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்தாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆகஸ்ட் 22ஆம் தேதி கிருஷ்ண பஜனாம்ருதம் இசை இசைக்கப்பட்டு, கிருஷ்ண லீலாம்ருத நாட்டியம் நடைபெற்றது. பின்னர், ஆகஸ்ட் 23ஆம் தேதி கிருஷ்ண கீர்த்தன பஜனை பாடியும், குழலிசை இசைத்தும் விழா நடைபெற்றது.

குழந்தைகள் கொண்டாடிய கிருஷ்ணஜெயந்தி விழா.

இதனைத் தொடர்ந்து மாலை 108 குழந்தைகள் கிருஷ்ணா, ராதை ஊள்ளிட்ட வேடங்கள் அணிந்து மங்கள வாத்யங்கள், நாம சங்கீர்த்தனம், கோலாட்டம், நடனம், வானவேடிக்கையுடன் ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலம் நந்தகோகுலம் கோசாலையில் தொடங்கி அக்கரஹார வீதி, ஈஸ்வரன்கோயில் வீதி, பெருமாள்கோயில் வீதி, யாகூப் வீதி, தேர் வீதி வழியாக சென்று மீண்டும் நந்தகோகுலத்தில் நிறைவடைந்தது.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் பெய்த மழையினால் குழந்தைகளின் ஊர்வலத்தில் தடை ஏற்படும் என்று பொதுமக்கள் எண்ணியிருந்த நிலையில், மழையிலும் குழந்தைகள் ஊர்வலத்தில் கலந்துகொண்டது ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஊர்வலத்தின் பின்னால் கண்ணன் ராதை சிலைகள் தேரில் கொண்டுவரப்பட்டது. அதற்கு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்சிக்கான ஏற்பாடுகளை நந்தகோகுல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். மேலும், கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details