ஈரோடு:குடியிருப்பில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் ரசாயனம் கலந்த நீர், நுரை பொங்கி வருவதால் போர்வெல் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி 39 வார்டு பகுதிக்கு உட்பட்ட, கே.எஸ் நகர் மரப்பாலம் 5 வது வீதியில் உள்ள கோபால் என்பவரது குடியிருப்பில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் (போர்வெல்) இருந்து குடிப்பதற்கு மற்றும் பிற தேவைக்கு பயன்படுத்த போர் போட்ட நிலையில், குடிநீர் குழாயில் இருந்து நுரையுடன் ரசாயன கழிவு நீர் வருவதை கண்டு குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் நுரையுடன் வெளியேறி அந்த வீதியில் சோப்பு நுரை போல் பொங்கி வீதியில் வழிந்து ஓடுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் போர்வெல் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “ இந்த பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி சார்பில் ஆற்று நீர் விநியோகம் தடைபடும் நேரங்களில், போர்வெல் தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், இந்த பகுதியில் உள்ள சில ஆழ்துளைக் கிணற்றில் துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர் வருகிறது.