தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கஞ்சா வாங்க வந்த இளைஞர்கள்: காவல் துறையிடம் ஒப்படைத்த மக்கள்! - ஈரோட்டில் கஞ்சா வாங்க வந்த இளைஞர்கள்: காவல் துறையிடம் ஒப்படைத்த மக்கள்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே 144 தடை உத்தரவை மீறி கஞ்சா வாங்க வந்த இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சா வாங்க வந்த இளைஞர்கள்: காவல் துறையிடம் ஒப்படைத்த மக்கள்
கஞ்சா வாங்க வந்த இளைஞர்கள்: காவல் துறையிடம் ஒப்படைத்த மக்கள்

By

Published : Mar 29, 2020, 8:54 PM IST

ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள சொலவனூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும், அதனை வாங்குவதற்கு இளைஞர்கள் அடிக்கடி இப்பகுதிக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி சொலவனூர் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா வாங்குவதற்காக இன்று அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர்.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள், அந்த இளைஞர்களை பிடித்து இங்கே எதற்கு சுற்றித் திரிகிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த இளைஞர்கள் கஞ்சா வாங்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஐந்து இளைஞர்களையும் பிடித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், இப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தனுஷ்கோடி அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள 96 கிலோ கஞ்சா பறிமுதல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details