ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "வடகிழக்கு பருவமழையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரது நடவடிக்கையின் காரணமாக பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.
அனைத்து மாவட்டங்களிலும் உயர் அலுவலர்கள் பொதுமக்களை சந்தித்து நிவாரணங்கள் வழங்கியுள்ளனர். மக்களின் அரசாக அதிமுக திகழ்கிறது. நம்பியூர் பேருந்து நிலைய கட்டடத்தில் முறைகேடு என கனிமொழி குறைகூறுகிறார். அங்கு நடைபெறும் பணிகளை தெரிந்து அவர் பேசவேண்டும்.