தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 16, 2023, 6:03 PM IST

ETV Bharat / state

மக்களை அச்சுறுத்தும் 'கருப்பன்': காட்டு யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் கருப்பன் யானையை பிடிக்க, 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

Elephant
அச்சுறுத்தும் யானை

தாளவாடி: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் 'கருப்பன்' காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயிகள் இருவரை அந்த யானை தாக்கியதில் உயிரிழந்தனர். இதனால் அச்சம் அடைந்த கிராம மக்கள், காட்டு யானையை உடனடியாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

கருப்பன் யானையை பிடிக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. ஆபரேசன் கருப்பு என்ற பெயரில் யானையை பிடிக்கும் பணியில் 3 கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. மருத்துவக்குழுவினர் மயக்க மருந்தை செலுத்தியும், தப்பிய காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து, மயக்க மருந்து செலுத்தினால் அதன் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதால் கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் யானையை பிடிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக மாரியப்பன், சின்னதம்பி ஆகிய இரண்டு கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், பிரகாஷ், விஜயராகவன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இன்றிரவு கருப்பன் யானை வரும் வழித்தடத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'மீனாட்சி கோயில் யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்' - அமைச்சர் பிடிஆர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details