ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மூன்று மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அணை கடந்த ஆண்டு பெய்த பலத்தமழை காரணமாக முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து பாசனப்பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.
கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்காலில் முதல்போக பாசனம் முடிந்து, கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் இரண்டாம் போக பாசனத்திற்கு எள், நிலக்கடலை சாகுபடிக்கு 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில், விநாடிக்கு 2300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.