ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கரடிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது இலந்தை பழம் காய் பிடிக்கும் பருவம் என்பதால் கரடிகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து புதுகுய்யனூர் கிராமத்துக்கு செல்கின்றன.
ஊரடங்கால், முன்பு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்த நெடுஞ்சாலையில், தற்போது வாகனப் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், யானை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் ஹாயாக சுற்றித்திரிகின்றன.